Author: admin

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும், திருகோணமலை – மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்கள், ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24ஆம் திகதி சுன்னாகம்…

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பணிப்பொறுப்பேற்பு

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று, ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை, யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக, யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில்…

அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண், திரு. வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

2006ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த திரு. வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஆவணி மாதம் 20ஆம்…

அமலமரித்தியாகிகள் சபையின் ஒழுங்குகளும் சட்டங்களும் திருத்தந்தையினால் அங்கீகரிக்கபட்டதன் 200ஆவது ஆண்டு நிறைவு

அமலமரித்தியாகிகள் சபையின் ஒழுங்குகளும் சட்டங்களும் திருத்தந்தையினால் அங்கீகரிக்கபட்டதன் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் ஏற்பாட்டில் மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில்…

‘நீதியின் ஓலம் 02’ கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மற்றும் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம் 02’ கவனயீர்ப்புப் போராட்டம் ஆவணி மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் செம்மணிபிரதேசத்தில் நடைபெற்றது.…