பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
பூநகரி பங்கின் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
