Month: July 2026

பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

பூநகரி பங்கின் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் நவீன மற்றும் புத்தாக்க கண்காட்சி

மாணவர்களின் அறிவியல், கலை, கைவினை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட நவீன மற்றும் புத்தாக்க கண்காட்சி ஆனி மாதம் 23,24,25ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் ரோய் அவர்களின்…

திருகோணமலை மறைமாவட்டத்தில் “யாரை அனுப்புவேன்” கண்காட்சி

இறைழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்ட திருப்பாலத்துவ சபையின் ஏற்பாட்டில் மறைமாவட்ட பங்குகள் மற்றும் துறவற சபைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “யாரை அனுப்புவேன்” கண்காட்சி ஆனி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர் அருட்தந்தை யூட்…

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை…

மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா

மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…