கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறை, உயர் பட்டப்படிப்புகள் பீடம் மூலமாக ‘கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இக்கற்கை நெறி ஓராண்டு காலத்திற்குரிய வார இறுதிகளில் நடைபெறும் சுயநிதிக் கற்கைநெறியாகும்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் இவ்வருடம் உயர்தர பரீட்சையை மேற்கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தவக்கால தியானம் அல்லைப்பிட்டிபங்கு
தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
பொது நிலையினர் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொது நிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்களுக்கும் தர்மபுரம் பங்கின் பொது நிலையினர் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
தவக்கால யாத்திரை மல்வம் பங்கு
மல்வம் பங்கு இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
