தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு
தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன்…
சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழாவிற்கான ஆயத்தங்கள்
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 4.30 மணிக்கு…
புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு
இலங்கை தேசிய கல்வி நிறுவகமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளின் கத்தோலிக்க பாட ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு புரட்டாதி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில்…
மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள்
மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெல்வில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டின் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி வரை மாங்குளம் டொண்பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின்…
