மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் நற்கருணை பேழை அர்ச்சிப்பும் பீடப்பணியாளர் உடை வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து நற்கருணை பேழையை ஆசீர்வதித்து 18 பீடப்பணியாளர்களுக்கான உடைகளை வழங்கிவைத்தார்.

By admin