முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை
பருத்தித்துறை புனித தோமையார் மற்றும் புனித அந்தோனியார் ஆலயங்களை சேர்ந்த முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை…
இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் கனுஸ்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 29 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
உரும்பிராய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
உரும்பிராய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் உரும்பிராய் புனித மிக்கேல்…
கோப்பாய் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை
கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இத்திருப்பலியில் யாழ்.…
சுன்னாகம் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
சுன்னாகம் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்ஸன்…
