Author: admin

திருகோணமலை வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கப்புச்சின் சபை அருட்தந்தை அமலஉதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை இயேசு சபை அருட்தந்தை சொலமன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கூழாமுறிப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி மரியாம்பிள்ளை வரவணிக்கம் அவர்கள் ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற…

நவாலி புனித பேதுருவானவர் ஆலய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆடி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின்…

சிலாபம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பாதையை திறந்து விடக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து மறிச்சிக்கட்டி – பூக்குளம் ஊடாக சிலாபம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாரம்பரிய பாதையை வழிபாட்டாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்…

புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக…