யாழ். மறைமாவட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தின் 06 மறைக்கோட்டங்களில் 12 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 2300 வரையான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07, 08ஆம் திகதிகளில்…

பலாலி பங்கில் குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு

குடும்ப வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…