இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் பங்கு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மறைக்கோட்ட…

முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை

மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ மாணவர் இல்லத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

காலி மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

காலி மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை கரித்தாஸ் SED நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறையாசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…

ஆன்மா இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

ஈழத்தின் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடகரும், யாழ். திருமறைக்கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான கலைஞர் திரு. நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்கள் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக இவர் பல…

நரையாம்பிட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா

மெலிஞ்சிமுனை நரையாம்பிட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி தொடர்ந்து நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை ஊர்காவற்துறை…