இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் கனுஸ்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 29 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
