சிலாவத்தை புனித அன்னாள் ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா

சிலாவத்தை புனித அன்னாள் ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்னை திரேசா நற்பணிமன்றம்

இறைமக்களுக்கு அன்புச்சேவைகள் புரியும் அன்னை திரேசா நற்பணிமன்றம் சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அன்னை தெரேசா கன்னியர் மடத்தில்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய “கலை மாலைப் பொழுது” கலை நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா சிறப்பு நிகழ்வான “கலை மாலைப் பொழுது” கலை நிகழ்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் யூபிலி கலைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு

குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான விசேட கருத்தமர்வு 23ஆம் திகதி வியாழக்கிழமை புனித யாகப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை…

வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கின் வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 34…