Author: admin

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார்

சன.25.புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளார் அதிபர் பணியிலிருந்து ஒய்வு

சன.25. கடந்த பத்து வருடங்களாக புனித. பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம், இன்று (25.01.2018) தனது 60 வது அகவையில் அதிபர் பணியிலிருந்து ஒய்வுபெறுகின்றார். இவர் கரம்பன் மண்ணில் பிறந்து 1985 ஆம் ஆண்டில் குருவாக…

புனித. சாள்ஸ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள்

சன19. யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் பாப்பிறைகளின் சபைகளில் ஒன்றான திருப்பாலர் சபையின் மறைமாவட்ட இயக்குனர் அருட்திரு.செ.எயின்சிலி றொஷான் ஏற்பாட்டில்…

சுதுமலை புனித யூதாததேயு புதிய ஆலயத் திறப்பு விழா

சன.15. மானிப்பய், சுதுமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனித யூதாததேயு ஆலயம் 08.01.2018 அன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தில் இளையோர் ஆண்டு

சன 13. புனித யோசே வாஸ் ஆண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வு சில்லாலையில் நடைபெற்றபோது, அந்நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், இளையோர் ஆண்டினை மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தின் கொடி ஆயரினால் ஏற்றப்பட்டு இளையோர் கீதம்…