செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் 52 ஆவது நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 07 என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் நிறைவில் 554 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு 547 என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் சிறுவர்கள் குழந்தைகளின் என்புத்தொகுதிகள் உட்பட தலையில்லாத என்புத்தொகுதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

