முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மொண்போர்ட் சர்வதேச பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரிய பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய பாடசாலைக்கான அடிக்கல்லை ஆசீர்வதிக்க உரோமை நகர் புனித கபிரியேலின் மொண்போர்ட் சபை துணைத்தலைவர் அருட்சகோதரர் பிரதாப் ரெட்டி, சபை திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜோண் பிரிட்டோ ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம், அருட்தந்தையர்கள், புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள், குளுனி அருட்சகோதரிகள், திருக்குடும்ப அருட்சகோதரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

By admin