எழுவைதீவு றோ.க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. ஜெயராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பாடசாலை வளாகத்தில் தேசிய மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் கலைநிகழ்வுகளும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் பிரதம விருந்தினராகவும் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

