யாழ். திருமறைக்கலாமன்ற கலாமுற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தியானமும் யோகா பயிற்சியும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
காலாமுற்ற பொறுப்பாளர் திருமதி ஜெயபிரபா ஜஸ்ரின் ஜெலூட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
கலாமுற்ற யோகா பயிற்றுவிப்பாளர் திரு. அச்சுதன் அவர்கள் நெறிப்படுத்திய இப்பயிற்சியில் 75 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
