போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா ஜோசப் அவர்கள் தை மாதம் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1949ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 77 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் சமூக, பங்கு, கல்விப்பணிகளாற்றியதுடன் விடுதி பொறுப்பாளராகவும், உருவாக்குநராகவும், மாகாண பொருளாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin