இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியதுடன் பாடசாலை ஆசிரியர் திரு. அனுஸ்ரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட கரோல் பாடல் வெளியீடும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

By admin