பதுளை மறைமாவட்டம் வெலிமட பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சதாசகாய அன்னை சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் கலந்து புதிய சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை மர்லன் அன்ரனி, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

