யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் இணைந்து கரோல் கீதங்களை இசைத்து செபித்தனர்.

இந்நிகழ்வில் 90 வரையான அருட்சகோதரிகள் பங்குபற்றியிருந்தனர்.

By admin