இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை இளாவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களுக்கான நினைவுத்திருப்பலியும் தொடர்ந்து ஆலய பங்கு பணிமனையில் இறைபதமடைந்த பங்கு குருக்களின் உருவப்பட காட்சிப்படுத்தலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் பலரும் கலந்து இறைபதமடைந்த அருட்தந்தையர்களுக்காக செபித்தனர்.

 

 

By admin