யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin