வணக்கமாத நிறைவை சிறப்பித்து நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித பேதுரு பவுல் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் இப்பவனியில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin