மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, குருக்கள், துறவிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

