வணக்கமாத நிறைவை முன்னிட்டு சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித திரேசாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்றாஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர் நடைபெற்றதுடன் இப்பேரணியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

