மாதகல் புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், விளையாட்டுக்கள். பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அன்புக் கன்னியர் சபை மட தலைவி அருட்சகோதரி மேரி ரோஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு தலைவர் செல்வன் நிராஜ், இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய உப தலைவர் செல்வன் யூட் நிக்ஸன், இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயலாளர் செல்வி பவிஸா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.