நாவாந்துறை பங்கு புனித மரியாள் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.