மட்டக்களப்பு மறைமாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஹர்சதன் றிச்சர்ட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.