சுன்னாகம் பங்கு சூராவத்தை புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 04ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கிளரேசியன் சபை அருட்தந்தை அருள்ராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை உரும்பிராய் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin