பதுளை மறைமாவட்டம் பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுனில் விஜேரட்ண அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பிரியலால் கூறே அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் திருக்குடும்ப திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin