மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பயிற்சிப்பட்டறையுடன் இணைந்த கருத்தமர்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் தயாளினி மற்றும் சயந்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரை, குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், தலைமைத்துவ பயிற்சிகள் ஊடாக இளையோரை வழிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் 35 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.