திருகோணமலை மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜொனத்தன் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 100இற்கும் அதிகமான மரியாயின் சேனை கொமிற்சிய, கியூரியா மற்றும் பிரசீடிய அங்கத்தவர்கள் பங்குபற்றி தமது வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டார்கள்.