தாளையடிப்பங்கில் பணியாற்றும் கார்மேல் சபை அருட்சகோதரிகள் மற்றும் சபை அன்னையினர் இணைந்து முன்னெடுத்த சபை திருவிழா ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை தாளையடி புனித கார்மேல் அலையகத்தில் நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனிஸ் சுவாம்பிள்ளை, அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் அருட்சகோதரர் றங்கண, கார்மேல் அலையக மடத்தலைவி மரியமலர், சபை அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டனர்.

