இவ்வருடம் கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க பாட மீட்டல் வகுப்புக்கள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வகுப்புக்களில் ஆசிரியர் ஜெசி அவர்கள் வளவாளராக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினார்.

இவ்வகுப்பில் 25 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin