முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் மூன்றாம் இடத்தைப்பெற்ற மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 2022ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாடசாலை லண்டன் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. சிங்கராசா அருள்நேசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு. சின்னையா பாஸ்கரன், லண்டன் பழைய மாணவர் சங்க ஊடக பொறுப்பாளர் திரு. செல்வ ஜெனதாஸ் நிரோஜன், பழைய மாணவர் சங்க கணக்காளர் திரு. பாக்கியநாதன் நேசநாயகம் மற்றும் திரு/திருமதி. மரியதாஸ் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

 

By admin