முல்லைத்தீவு மறைக்கோட்ட அருட்பணி சபையின் வருடாந்த கூட்டம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு றோ.க பாடசாலையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளின் ஆலயசபை தலைவர்கள், பொருளாளர்கள்,  செயலாளர்கள் அருட்தந்தையர்களென 75 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin