அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு மேம்படுத்தலை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 40ற்கும் அதிகமான சிறார்கள் பங்குபற்றியதுடன் விளையாட்டுக்கள், குழுசெயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.

By admin