அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
சாட்டி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி. பப்சி மரியதாசன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் திரு. மரியதாசன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழு செயற்பாடுகள் ஊடாக கருத்தமர்வை நெறிப்படுத்தினார்கள்.
இக்கருத்தமர்வின் இறுதியில் நற்கருணை வழிபாடு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 60 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_103.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_105.png)