பூனைத்தொடுவாய் புனித வேளாங்கன்னி அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட குருவும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அருட்தந்தை நவரெத்திணம் – நவாஜி அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

