போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி எமிலியானா ஜெரெமியாஸ் அவர்கள் ஆனி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1960ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை மேற்கொண்ட இவர் 66 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக, பங்கு பணிகளுடன் மாகாண ஆலோசகராகவும், குழுத்தலைவியாகவும், வயது முதிர்ந்த அருட்சகோதரிகள் பராமரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் நவாலி புனித பேதுரு பாவிலு பங்கில் கடந்த 18 வருடங்களாக நற்கருணைப் பணியாளராக பணியாற்றிய திரு. அன்ரன் மக்சி அவர்களும் ஆனி மாதம் 19ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர்களின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

