ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் 22வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற மரியாயின் சேனையினரின் சிறப்பு திருப்பலியை பங்குதந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இடப்பெயர்வை தொடர்ந்து ஊர்காவற்றுறை பங்கில் 2004ஆம் ஆண்டு அப்போதைய பங்குதந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் பணிக்காலத்தில் “பரலோக இராக்கினி பிரசீடியம்” என்னும் பெயரில் மரியாயின் சேனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

