இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலி ஆரம்பத்தில் புனிதரின் திருச்சொருப பவனி இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

தொடர்ந்து 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பாக வலய ரீதியாக வலய கொடிகள் ஏற்றப்பட்டு திருப்பலிகள் இடம்பெற்றதுடன் 10 நாட்கள் திருச்செபமாலை இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin