நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா யூலை மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை புனித யுவானியார் ஆலயத்தில் அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களின் வாழ்வும் பணியும் தொடர்பான கருத்துரையும் விளையாட்டு நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் 60 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.