அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம் எம் உறவுகளின் எலும்புகளை செம்மணி போன்ற மனித புதைகுழிகளிலிலிருந்து அகழ்ந்தெடுப்பது வேதனையை தருவதுடன் இக்கொடுமையுடன் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்ட சர்வமத பேரவை செம்மணி புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றின் தீர்மானத்தின்படி, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை, காலம் தாழ்த்தாது, விரைவாக சேகரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள யாழ். மாவட்ட சர்வமத பேரவை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் “இந்தப்புதைகுழிக்குள் எமது உறவுகள் உள்ளனரா” என்ற கேள்வியை எழுப்புவதை சர்வதேச சமூகமும் இலங்கையிலுள்ள அனைவரும் செவிமடுத்து அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டமெனவும் வலியுறுத்தியுள்ளது.

By admin