சிலுவையின் கன்னியர் சபை அருட்சகோதரி திரேசில்டா பத்திநாதன் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் அருட்சகோதரி திரேசில்டா பத்திநாதன் அவர்கள் தனது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றியதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.