யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் அரங்கு சார் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அரங்க நுட்ப பயிற்சி யூன் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி 21ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்; திருமறைக்கலாமன்ற பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரங்க உடல் உள பயிற்சிகள், அரங்க முகாமைத்துவம், எழுத்துருவாக்கம் மற்றும் நாடக பயிற்சிகள், குரல் பயிற்சி, நெறியாள்கை, அரங்க விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.