மன்னார் மாவட்ட அடம்பன் பிரதேச சிரேஸ்ர பிரஜைகள் சங்க மூதாளர் குழுவினரால் முன்னெடுக்கபட்ட யாழ். மாவட்டத்தை நோக்கிய கள அனுபவ பயணம் 20ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மூதாளர் குழு தலைவர் திரு. அருள் யேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதாளர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம், தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், பலாலி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

யாழ். புனித மரியன்னை பேராலயத்தை தரிசித்த மூதாளர்கள் யூபிலி ஆண்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள யூபிலி புனித வாசல் வழியாக பேராலயத்திற்குள் நுழைந்து இறையாசீரை பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin