இலங்கை தேசிய மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் கருத்தமர்வும் கடந்த 14ஆம், 15ஆம் திகதிகளில் றாகம தேவத்தை தியான இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பிரதீப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி போதனா முறையை மேம்படுத்தும் நோக்கோடு ஆளுமை விருத்தி, தலைமைத்துவம், ஒழுக்க இறையியல் போன்றவற்றை உள்ளடக்கி கருத்துரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் பேசும் மறைமாவட்டங்களை சேர்ந்த 59 வரையான மறையாசிரியர்களும் மறைக்கல்வி நிலைய இயக்குநர்களும் பங்குபற்றினர்.