திருகோணமலை மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை அரம்பிக்கப்பட்டதன் 160ஆவது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியூசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடைபவனி, வரவேற்பு வாயில் திறப்பு என்பவற்றுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாடசாலையில் ஆரம்பமாகிய பவனி நகரத்தின் பிரதான வீதிகள் ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்து அங்கு 160ஆவது ஆண்டை சிறப்பித்து பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்ட வரவேற்பு வாயில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.
இந்நிகழ்வில் மூதூர் வலய கல்வி பணிப்பாளர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.