தூய ஆவியார் திருவிழாவை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்ட அருங்கொடை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

அருங்கொடை இயக்க இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை றொபின்சன் போல், அருட்தந்தையர்கள் சேவியர் ரஜீவா இருதயராஜ், மற்றும் யூட் சர்வானந்தன் ஆகியோர் இணைந்து வழிநடத்தினர்.

ஆராதனைகள் நிறைவில் நற்கருணை வழிபாடும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

இவ்ஆராதனைகளில் குருக்கள், துறவிகள், பொதுநிலையினரென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin